Get Adobe Flash player

சாவை பின்தள்ளும் மாத்திரை கண்டுபிடிப்பு

மனித வாழ்க்கை நூறு வருடங்கள் என்று மூத்தவர்கள் சொல்வார்கள் ஆனால் அந்த நூறு வருடங்களை கடப்பது என்னவோ சில மனிதர்கள் மட்டும் தான் சாவு எம்மை சூழ்ந்து நின்று சிறுவயதிலோ அல்லது நடுத்தர வயதிலோ சாகடிகிறது. இத்தகைய சாவினை வெல்வதற்கு மருத்துவமும் மாத்திரைகளும் மிக முக்கிய பங்கு தருகின்றன இன்றைய மருத்துவ உலகில் எத்தனையோ அறிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டுபிடிப்பதற்கான பெரும் முயற்சிகள் நடை பெற்று வருகின்றன, அந்த வகையில் மிக முக்கிய ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் அதாவது சாவினை தள்ளி வைக்கும் சரித்திர மாத்திரை

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீண்ட காலமாக மாற்றும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள ‘சிர்ட்6′ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.

எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது. இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்:

149..பார்வையாளர்கள்